!- START disable copy paste -->

Saturday, May 16, 2015



86.அம்மம்மா கேளடி தோழி



வருடம்
1964                                  
பாடலாசிரியர்
கண்ணதாசன்  
படம்   
கறுப்புப்பணம்                   
இசை
விஸ்வநாதன் ராமமுர்த்தி
பாடியவர்
எல் ஆர் ஈஸ்வரி              



                          பாடல் வரிகள்
அம்மம்மா கேளடி தோழி
சொன்னானே ஆயிரம் சேதி
கண்ணாலே வந்தது பாதி
சொல்லாமல் வந்தது மீதி  (அம்மம்மா )

இதுதான் சுகமோ இன்னும் வருமோ
இளமை தருமோ மயக்கம் வருமோ

பிஞ்சாக நானிருந்தேனே
பெண்ணாக வளர்த்து விட்டானே
அஞ்சாமல் அணைத்து விட்டானே
அச்சாரம் கொடுத்து விட்டானே (அம்மம்மா )

அவனோ இளைஞன் இவளோ சிறுமி
ஒரு நாள் கனவில் உலகே மறந்தார்

முத்தாரம் சரியவைத்தானே
முள் மேலே தூங்க வைத்தானே
நூலாட்டம் இளைக்க வைத்தானே
பால் போலே வெளுக்க வைத்தானே (அம்மம்மா )

அய்யய்யோ பாவமே அணையாத மோகமே
அனுபவம் கொஞ்சமே அலையுதே நெஞ்சமே

தன்னாலே பேச வைத்தானே
தண்ணீரைக் குடிக்க வைத்தானே
தள்ளாடி நடக்க வைத்தானே
எல்லோரும் சிரிக்க வைத்தானே  (அம்மம்மா )

1 comment: