!- START disable copy paste -->

Saturday, May 16, 2015



85.அம்மம்மா காற்று வந்து



வருடம்
1965                             
பாடலாசிரியர்
கண்ணதாசன்
படம்    
வெண்ணிறாடை              
இசை
விஸ்வநாதன் ராமமுர்த்தி  
பாடியவர்
பி.சுசீலா                       

                         
                       பாடல் வரிகள்

அம்மம்மா காற்று வந்து
ஆடை தொட்டுப் பாடும்
பூ வாடை கொண்ட மேனி
தன்னில் ஆசை வெள்ளம் ஓடும்
நீராடும் மேலாடை
நெஞ்சை மெல்ல மூடும்
கை தேடி கை தேடிக் கன்னம்
கொஞ்சம் வாடும் (அம்மம்மா)

யாரோ வந்து நேரே நின்று
என்னை மெல்ல கொஞ்சும் சுகமோ
நீரில் நின்று தேனும் தந்து
அள்ளி அள்ளி கொள்ளும் சுகமோ
தள்ளாடி தள்ளாடி செல்லும் பெண்ணை தேடி
சொல்லாமல் கொள்ளாமல்
துள்ளும் எண்ணம் கோடி (அம்மம்மா)

ஏதோ இன்பம் ஏனோ தந்து
என்னை தொட்டு செல்லும் வெள்ளமே
தானே வந்து தானே தந்து
தள்ளி தள்ளி செல்லும் உள்ளமே
அன்னாளில் என்னாளும் இல்லை இந்த எண்ணம்
அச்சாரம் தந்தாயே அங்கம் மின்னும் வண்ணம்  (அம்மம்மா)

No comments:

Post a Comment