!- START disable copy paste -->

Saturday, May 16, 2015



95.அம்மாக்கண்ணு சும்மா



வருடம்  
1972                                
பாடலாசிரியர்
கண்ணதாசன்
படம்    
ஞானஒளி                        
இசை
எம்.எஸ்.விஸ்வநாதன்                                        
பாடியவர்
டி.எம்.எஸ். & எல்.ஆர்.ஈஸ்வரி        

                            
                            பாடல் வரிகள்
அம்மாக் கண்ணு சும்மா சொல்லு
ஆசை இல்லையோ என் மேல் ஆசை இல்லையோ
உன்னை அள்ளிக் கட்டிக் கொள்ளும்போது
இன்பம் வரல்லையோ அந்த இன்பம் வரல்லையோ

ஏதோ சொன்னேன் கோபம் கொண்டேன்
பாசம் இல்லாமே - நீங்க
இப்போ சொன்னா ஏதும் செய்வேன்
கோபம் கொள்ளாமே.. கோபம் கொள்ளாமே..

வாடா கண்ணு உன்னைப் போலே ராஜாத்தி உண்டோ
ஆஹா.. மாமா உன்னைப் போலே
நல்ல மாப்பிள்ளை உண்டோ
மாமாக் கண்ணு சும்மா சொல்லு ஆசை இல்லையோ
என் மேல் ஆசை இல்லையோ
உன்னை அள்ளிக் கட்டிக் கொள்ளும்போது
இன்பம் வரல்லையோ அந்த இன்பம் வரல்லையோ

பூவும் பொட்டும் சேலைக் கட்டும் போதை சிந்துதடி - நீ
போர்த்து போர்த்து பேசும்போது
மோகம் பொங்குதடி மோகம் பொங்குதடி
பொன்னும் பெண்ணும் இன்றும் என்றும்
மாமா சொந்தமடி - நான்
பொல்லாப் பொண்ணு இல்லை என்று
வந்தேன் நல்ல வழி வந்தேன் நல்ல வழி    (அம்மா)

நானா வந்து தானாத் தந்தா நல்லா இல்லையின்னு - நான்
ஓடிப் பாத்து ஒளிஞ்சு பாத்து
வந்தேன் சொந்தமின்னு வந்தேன் சொந்தமின்னு

தேனாச் சிந்தும் ரோஜாப் பந்தை நானா அள்ளட்டுமா
பூஞ்செவ்வாய் தொட்டு ஒண்ணோ
ரெண்டோ முத்தம் சிந்தட்டுமா
முத்தம் சிந்தட்டுமா    (அம்மா)


No comments:

Post a Comment