84.அம்பிகையே ஈஸ்வரியே
வருடம்
|
1972
|
பாடலாசிரியர்
|
கண்ணதாசன்
|
படம்
|
பட்டிக்காடா
பட்டணமா
|
இசை
|
எம்.எஸ்.விஸ்வநாதன்
|
பாடியவர்
|
டி.எம்.எஸ்
|
.
பாடல் வரிகள்
அம்பிகையே ஈஸ்வரியே எம்மை
ஆள வந்து கோயில்
கொண்ட குங்குமக்காரி
ஓங்காரியே
வேப்பிலைக்காரி ஒரு
உடுக்கையிலே பகை
விரட்டும் முத்துமாரி (அம்பிகையே)
வேலையிலே மனசு
வச்சோம் முத்துமாரி – இப்போ
வெற்றிக் கொடி
நாட்டுகிறோம் முத்துமாரி
ஆலமரம்
போலிருக்கும் எங்கள் கூட்டம் – எம்மை
ஆதரிச்சு
வாழ்த்துதடி முத்துமாரி (அம்பிகையே)
ஏழைகளை ஏச்சதில்லை
முத்துமாரி - நாங்க
ஏமாத்தி பொழச்சதில்லை முத்துமாரி
வாழ விட்டு வாழுகிறோம் முத்துமாரி - இனி
வருங்காலம் எங்களுக்கே முத்துமாரி (அம்பிகையே)
ஏமாத்தி பொழச்சதில்லை முத்துமாரி
வாழ விட்டு வாழுகிறோம் முத்துமாரி - இனி
வருங்காலம் எங்களுக்கே முத்துமாரி (அம்பிகையே)
சிவகாமி உமையவளே
முத்துமாரி - உன்
செல்வனுக்கும் காலமுண்டு முத்துமாரி
மகராஜன் வாழ்கவென்று வாழ்த்து கூறி - இந்த
மக்களெல்லாம் போற்ற வேணும் கோட்டை ஏறி (அம்பிகையே)
செல்வனுக்கும் காலமுண்டு முத்துமாரி
மகராஜன் வாழ்கவென்று வாழ்த்து கூறி - இந்த
மக்களெல்லாம் போற்ற வேணும் கோட்டை ஏறி (அம்பிகையே)
No comments:
Post a Comment