!- START disable copy paste -->

Saturday, May 16, 2015



83.அம்பிகை நேரில் வந்தாள்



வருடம்       
1972                 
பாடலாசிரியர்
கண்ணதாசன்    
படம்   
இதோ எந்தன் தெய்வம்                  
இசை
எம்.எஸ்.விஸ்வநாதன்                   
பாடியவர்
எஸ்.பி.பி. & பி.சுசீலா  

                                                      
                    
                       பாடல் வரிகள்

தேவீ.........தேவா......... தேவீ.........
அம்பிகை நேரில் வந்தாள்
அன்பினை அள்ளித் தந்தாள்
கோபுரம் கண்ணில் கண்டேன்
கொஞ்சிடும் கலசம் கண்டேன்
தேவி.., என் தேவி... 

ஆலயம் திறந்து வைத்தேன்
ஆராத்தித் தட்டும் வைத்தேன்
சன்னிதானம் வரையில்
தேவியைக் காண வைத்தேன்
தேவா.. என் தேவா (ஆலயம்) 

பூவிலே பூஜை செய்வேன்
காதிலே வேதம் சொல்வேன்
ஆயிரம் குடங்கள் கொண்டு
அபிஷேகம் நடத்தி வைப்பேன்

சாத்துப்படி போட்டு வைப்பேன்
சந்தனத்தில் ஊற வைப்பேன்
அர்த்த ஜாமம் வரையில்
அம்மனைக் காண வைப்பேன்
தேவா,.. என் தேவா....

பல்லக்கில் ஏற்றி வைப்பேன்
பாமாலை சூட்டி வைப்பேன்
உல்லாச ஊர்வலத்தில்
உள்ளத்தை மயங்க வைப்பேன்

கோயிலில் குடியிருப்பேன்
குத்துவிளக்கேற்றி வைப்பேன்
தேவனின் நிலையில் நின்று
தேவியைத் தழுவிக் கொள்வேன்
தேவி.... என் தேவி...  (அம்பிகை)

No comments:

Post a Comment