!- START disable copy paste -->

Saturday, May 16, 2015



75.அந்தி வரும் நேரம்



வருடம்  
1984                          
பாடலாசிரியர்
வைரமுத்து
படம்     
முந்தானை முடிச்சு             
இசை
இளையராஜா                                                    
பாடியவர்
எஸ்.பி.பி. & எஸ்.ஜானகி 

                 
                 
                           பாடல் வரிகள்

அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்
ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம்
ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம்
அந்தி வரும் நேரம் வந்ததோரு ராகம்

மந்திரங்கள் ஒலித்தது... மங்கை உடல் சிலிர்த்தது...
சங்கமத்தின் சுகம் நினைத்து....
சிந்து கவி பிறந்தது...சிந்தனைகள் பறந்தது
சந்தனத்து உடல் அணைத்து...

இதழில் ஒரு ஒலை... எழுதும் இந்த வேளை...
இளமை என்னும் சோலை... முழுதும் இன்ப லீலை...
நீராடுது மாந்தளிர் தேகம் போராடுது காதலின் வேகம்
என்றென்றும் ஆனந்த யோகம்

அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்

இன்பத்துக்கு முகவுரை என்றுமில்லை முடிவுரை
நீயிருக்க ஏது குறை...
பாதம் முதல் தலை வரை... பார்த்து நின்ற தலைவனை...
பாட வந்தேன் நூறு முறை...

அணைத்தால் தேவ லோகம்... அருகே வந்து சேரும்...
நினைத்தால் இங்கு யாவும் இனிமை என்று கூறும்...
ஆஹாஹ் இது மார்கழி மாதம்...அம்மாடியோ முன்பனி வீசும்...
சூடேற்றும் பூ முல்லை வாசம்....

அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்

No comments:

Post a Comment