!- START disable copy paste -->

Saturday, May 16, 2015



71.அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே 


வருடம்  
1968                                
பாடலாசிரியர்
வாலி                 
படம்    
உயர்ந்த மனிதன்                 
இசை
எம்.எஸ்.விஸ்வநாதன்    
பாடியவர்
டி.எம்.எஸ்

.  .
                         
                           பாடல் வரிகள்                  
                       
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே
நண்பனே! நண்பனே! நண்பனே!
இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே
அது ஏன்? ஏன்? ஏன்? நண்பனே!

பாடம் படிப்பு ஆட்டம் பாட்டம்
இதைத் தவிர வேறெதைக் கண்டோம்
புத்தகம் பையிலே புத்தியோ பாட்டிலே
பள்ளியைப் பார்த்ததும் ஒதுங்குவோம் மழையிலே
நித்தமும் நாடகம் நினைவெல்லாம் காவியம்
உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லையே நம்மிடம்

பள்ளியை விட்டதும் பாதைகள் மாறினோம்
கடமையும் வந்தது கவலையும் வந்தது
பாசமென்றும் நேசமென்றும்
வீடு என்றும் மனைவி என்றும்
நூறு சொந்தம் வந்த பின்பும்
தேடுகின்ற அமைதியெங்கே? அமைதி எங்கே? ((அந்த நாள்)

அவனவன் நெஞ்சிலே ஆயிரம் ஆசைகள்
அழுவதும் சிரிப்பதும் ஆசையின் விளைவுகள்
பெரியவன் சிறியவன் நல்லவன் கெட்டவன்
உள்ளவன் போனவன் உலகிலே பார்க்கிறோம்
எண்ணமே சுமைகளாய் இதயமே பாரமாய்
தவறுகள் செய்தவன் எவனுமே தவிக்கிறான் அழுகிறான்  ((அந்த நாள்)

No comments:

Post a Comment