!- START disable copy paste -->

Saturday, May 16, 2015



64.அதிசயம் பார்த்தேன்



வருடம்       
1963
பாடலாசிரியர்
பட்டுக்கோட்டையார் 
படம்   
கலையரசி                                             
இசை
கே.வி.மகாதேவன்      
பாடியவர்
சீர்காழி கோவிந்தராஜன்  

                       
                                             பாடல் வரிகள்
                           
                               தொகையறா

தஞ்சமென்று வந்தவரைத் தாய்போல் ஆதரித்து
வஞ்சகரின் செயல்களுக்கு வாள் முனையில் தீர்ப்பளித்து
அஞ்சாத நெஞ்சில் அன்புக்கு இடம் கொடுத்து
அறங் காக்கும் மக்களிடம் பார்த்த விந்தையைச் சொல்லட்டுமா?
                             
                                பாட்டு

அதிசயம் பார்த்தேன் மண்ணிலே அது
அப்படியே நிக்குது எங்கண்ணிலே-
நான் அதிசயம் பார்த்தேன் மண்ணிலே-
அது அப்படியே நிக்குது எங்கண்ணிலே

மூணு பக்கமும் கடல் தாலாட்டுது- தன்
மானமுள்ள மக்களைப் பாராட்டுது
வானுயரும் மலையில் அருவி பெருகியே
வந்து வந்து நிலத்தை நீராட்டுது பல
வளம் பெருகி மறவர் பேர் நாட்டுது (அதிசயம் )

மலையைச் செதுக்கி வச்ச சிலையிருக்கு அதில்
மனங்கவரும் அழகுக் கலையிருக்கு,
மானிருக்கு வண்ண மயிலிருக்குச்
செந்தேனிருக்கு வீரச் செயலிருக்கு அங்கே (அதிசயம் )

சந்தன மரக்கிளையும் தமிழ்க் கடலும் தழுவி
சந்தமிசைத்துத் தென்றல் தவழ்ந்து வரும்
செந்தாழை மலர் தொட்டு மணம் சுமந்து வரும் இங்கே
தங்கிட நிழலுமில்லை பொங்கிடக் கடலுமில்லை
சற்று நேரங்கூட வெயில் மறைவதில்லை
நம்மை தழுவிடத் தென்றலெதும் வருவதில்லை.(அதிசயம்)

No comments:

Post a Comment