!- START disable copy paste -->

Saturday, May 16, 2015



61.அதிகாலை சுபவேளை


வருடம்  
1996                        
பாடலாசிரியர் 
வைரமுத்து        
படம்    
நட்பு                       
இசை
இளையராஜா                                    
பாடியவர்
கே.ஜே.ஜேசுதாஸ் & எஸ்.ஜானகி    

                            
                            பாடல் வரிகள்

அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது
காதல் சொன்ன காகிதம் பூவாய்ப் போனது
வானில் போன தேவதை வாழ்த்துச் சொன்னது
ஒரு தத்தை கடிதத்தைத் தன் நெஞ்சுக்குள்ளே வாசிக்க (அதிகாலை)

அன்பே வா வா அணைக்கவா
நீ நிலவுக்குப் பிறந்தவளா
போதை வண்டே பொறுத்திரு
இன்று மலருக்குத் திறப்பு விழா

உன்னை வந்து பாராமல் தூக்கம் தொல்லையே
உன்னை வந்து பார்த்தாலும் தூக்கம் இல்லையே
ஒரு பாரம் உடை மீறும் நிறம் மாறும் கனியே
இதழோரம் அமுதூறும் பரிமாறும் இனியே
அடி தப்பி போகக்கூடாது   (அதிகாலை)

தென்றல் வந்து தீண்டினால்
இந்தத் தளிர் என்ன தடை சொல்லுமா
பெண்மை பாரம் தாங்குமா
அந்த  இடை ஒரு விடை சொல்லுமா

என்னைச்  சேர்ந்த உன்னுள்ளம்  ஈரம் மாறுமா
தங்கம் என்ன சுட்டாலும் சாரம் போகுமா
இளங்கோதை ஒரு பேதை இவள் பாதை உனது
மலர் மாலை அணியாமல் உறங்காது மனது
இது போதும் சொர்க்கம் வேறேது  (அதிகாலை)

1 comment: