!- START disable copy paste -->

Saturday, May 16, 2015



59.அத்தை மடி மெத்தையடி



வருடம்   
1963                                        
பாடலாசிரியர்
வாலி
படம்   
கற்பகம்                           
இசை
டி.கே.ராமமூர்த்தி
பாடியவர்
பி.சுசீலா


                            பாடல் வரிகள்

லுலுலாயி ஆரி ஆரி ஆரி ஆரிரரோ
லுலுலாயி ஆரி ஆரி ஆரி ஆரிரரோ

அத்தைமடி மெத்தையடி ஆடி விளையாடம்மா
ஆடும் வரை ஆடி விட்டு அள்ளி விழி மூடம்மா  (அத்தை)

மூன்றாம் பிறையில் தொட்டில் கட்டி
முல்லை மல்லிகை மெத்தையிட்டு
தேன் குயில் கூட்டம் பண்பாடும்
மான் குட்டி கேட்டு கண் மூடும் இந்த
மான் குட்டி கேட்டு கண் மூடும்
லாலாலலலலலல.......ம்......  (அத்தை)

வேறோர் தெய்வத்தை போற்றவில்லை
வேறோர் தீபத்தை ஏற்றவில்லை
அன்றோர் கோயிலை ஆக்கி வைத்தேன்
அம்பிகையாய் உன்னை தூக்கி வைத்தேன் அதில் 
அம்பிகையாய் உன்னை தூக்கி வைத்தேன்
லாலாலலலலலல.......ம்......  (அத்தை)

வந்தால் உன்னுடன் வந்திடுவேன்
நின்றால் உன்னுடன் நின்றிவேன்
தந்தால் என்னுயிர் தந்திடுவேன்
தித்திக்கும் முத்தங்கள் சிந்திடுவேன்
லாலாலலலலலல.......ம்......  (அத்தை)

No comments:

Post a Comment