!- START disable copy paste -->

Friday, May 15, 2015


40.அடிப்பெண்ணே பொன்னூஞ்சல்


வருடம்  
1978                                                        
பாடலாசிரியர்
பஞ்சு அருணாச்சலம்
படம்    
முள்ளும் மலரும்                
இசை
இளையராஜா            
பாடியவர்
ஜென்சி
                       பாடல் வரிகள்

அடிப்பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை
வண்ணங்கள் தோன்றும் இயற்கை
உல்லாசம் சந்தோஷம் வாழ்வில்
கொண்டாடுதே சுகம் கோடி என்பதே
பண்பாடுதே மனம் ஆடுகின்றதே  (அடிப்பெண்ணே)

வானத்தில் சில மேகம் பூமிக்கோ ஒரு தாகம்
பாவை ஆசை என்ன
பூங்காற்றில் ஒரு இராகம் பொன் வண்டின் ரீங்காரம்
பாடும் பாடல் என்ன
சித்தாடு முத்தாடு செவ்வந்தியே
சிங்காரம் பார்வை சொல்லும் செய்தி என்னவோ (அடிப்பெண்ணே)

நீரோடும் ஒரு ஓடை மேலாடும் திருமேடை
தேடும் தேவையென்ன
பார்த்தாளாம் ஒரு ராணி பாலாடை இவள் மேனி
கூறும் ஜாடை என்ன
ஒன்றோடு ஒன்றான எண்ணங்களே
கண்ணோடு கோலமிட்டு ஆடுகின்றதோ  (அடிப்பெண்ணே)

No comments:

Post a Comment