30.அடி என்னடி ராக்கம்மா
வருடம்
|
1972
|
பாடலாசிரியர்
|
கண்ணதாசன்
|
படம்
|
பட்டிக்காடா
பட்டணமா
|
இசை
|
விஸ்வநாதன்
ராமமுர்த்தி
|
பாடியவர்
|
டி.எம்.எஸ்.
|
பாடல் வரிகள்
(அடி ராக்கு என் மூக்கு என் கண்ணு என் பல்லு என் ராஜாயி)
அடி என்னடி
ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு
என் நெஞ்சி குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்க சிவப்பு
மச்சானை இழுக்குதடி அடி என்னடி ராக்கு….
என் நெஞ்சி குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்க சிவப்பு
மச்சானை இழுக்குதடி அடி என்னடி ராக்கு….
அஞ்சாறு
ரூபாய்க்கு மணிமாலை
உன் கழுத்துக்கு
பொருத்தமடி
அம்மூரு மீனாட்சி
பாத்தாலும்
அவ கண்ணுக்கு
வருத்தமடி
சின்னாலப்பட்டியிலே
கண்டாங்கி எடுத்து
என் கையாலே கட்டி
விடவா
என் அத்த அவ பெத்த என் சொத்தே
அடி ராக்கம்மா கொத்தோட
என் அத்த அவ பெத்த என் சொத்தே
அடி ராக்கம்மா கொத்தோட
முத்து தரவோ (அடி என்னடி)
தெய்வானை
சக்களத்தி வள்ளி குறத்தி
நம்ம கதையிலே
இருக்குதடி
சிங்கார மதுரையின் வெள்ளையம்மா
சிங்கார மதுரையின் வெள்ளையம்மா
கதை தினம் தினம்
நடக்குதடி
அடி தப்பாமல் நான்
உன்னை சிறை எடுப்பேன்
ஒண்ணு ரெண்டாக இருக்கட்டுமே
என் கண்ணு என் பல்லு என் மூக்கு என் ராஜாயி
கல்யாண வைபோகமே.. (அடி என்னடி)
என் கண்ணு என் பல்லு என் மூக்கு என் ராஜாயி
கல்யாண வைபோகமே.. (அடி என்னடி)
No comments:
Post a Comment