!- START disable copy paste -->

Friday, May 15, 2015



18.அட உச்சந்தல உச்சியில


வருடம்   
1991                                 
பாடலாசிரியர்
வாலி    
படம்    
சின்ன தம்பி                       
இசை
இளையராஜா                  
பாடியவர்
மனோ

                        பாடல் வரிகள்

அட உச்சந்தல உச்சியில
உள்ளிருக்கும் புத்தியில பாட்டு
இது அப்பன் சொல்லி வந்ததில்ல
பாட்டன் சொல்லி தந்ததில்ல நேத்து
எப்படிதான் வந்ததுன்னு சொல்லுறவன் யாரு
இதில் தப்பிருந்தா என்னுதில்ல
சாமிகிட்ட கேளு    (அட உச்சந்தல)

கண்மாயி நெறஞ்சாலும் அதை பாடுவேன்
நெல்லு கதிர் முத்தி முளைச்சாலும் அதை பாடுவேன்
புளியம் பூ பூத்தாலும் அதை பாடுவேன்
பச்ச புல் மேலே பனி தூங்கும் அதை பாடுவேன்

செவ்வானத்த பார்த்தா சின்ன சிட்டுகள பார்த்தா
செம்மறிய பார்த்தா சிறுச் சித்தெறும்ப பார்த்தா
என்னை கேட்காமலே பொங்கிவரும்
கற்பனைதான் பூத்து வரும்
பாட்டு....தமிழ் பாட்டு...   (அட உச்சந்தல)

தெம்மாங்கு கிளி கன்னி தேன் சிந்துதான் இன்னும்
தாலாட்டு தனி பாட்டு எச பாட்டுதான்
என் பாட்டு இது போல பல மாதிரி
சொன்னா எடுப்பேனே படிப்பேனே குயில் மாதிரி

தாயலத்தான் வந்தேன் இங்கு பாட்டலத்தான் வளர்ந்தேன்
வேறாரையும் நம்பி இங்கே வரல்லே சின்ன தம்பி
இங்கு நான் இருக்கும் காலம் மட்டும்
கேட்டிருக்கும் திக்கு எட்டும்
பாட்டு...எந்தன் பாட்டு....   (அட உச்சந்தல)

No comments:

Post a Comment