163.அழகே நீ பிறந்தது
வருடம்
|
1984
|
பாடலாசிரியர்
|
கங்கை
அமரன்
|
படம்
|
நாணயம் இல்லாத
நாணயம்
|
இசை
|
விஜய் ஆனந்த்
|
பாடியவர்
|
எஸ்.பி.பி
|
.
பாடல் வரிகள்
அழகே நீ பிறந்தது
இவளிடம் தானோ
அமுதே நீ
தவழ்ந்திடும் இதழ் இதுதானோ (அழகே)
விண்வெளி தீபங்களோ
மயிலின் விழிகள்
தேன்மழை சாரல்களோ
குயிலின் மொழிகள்
மாஞ்சோலை கனிகள்
உன் தேகச் சிமிழ்கள்
நீ காட்டும்
எழில்கள் என் கண்ணின் தாபங்கள்
கலையோ கலைமகள்
அருள் வரமோ
செவ்வானிலே பொன்
மேகமே இந்த
பூமகள் வரும் ரதமோ
(அழகே)
பகலின் ஒளி
மழையில் இரவின் தவிப்பு
இரவின் குளிர்
மடியில் பகலின் விழிப்பு
உன் பார்வை
விருந்து என் நோயின் மருந்து
நீ சேரும்
வரைக்கும் என் மஞ்சம் துடிக்கும்
கனியே கனிந்திட
மனம் இல்லையோ
உன் நெஞ்சிலே என்
ஓவியம் நான்
வரைந்திட
தயவில்லையோ (அழகே)
No comments:
Post a Comment