164.அழகே வா அருகே வா
வருடம்
|
1964
|
பாடலாசிரியர்
|
கண்ணதாசன்
|
படம்
|
ஆண்டவன்
கட்டளை
|
இசை
|
விஸ்வநாதன் ராமமுர்த்தி
|
பாடியவர்
|
பி.சுசீலா & டி.எம்.எஸ்.
|
பாடல் வரிகள்
அழகே வா……
அழகே வா அருகே வா
அலையே வா தலைவா வா
அழகே வா வா வா அழகே வா
அழகே வா அருகே வா
அலையே வா தலைவா வா
அழகே வா வா வா அழகே வா
ஆலய கலசம் ஆதவனாலே
மின்னுதல் போலே மின்னுது இங்கே (அழகே)
மின்னுதல் போலே மின்னுது இங்கே (அழகே)
ஒரு கேள்வியை உன்னிடம் கேட்டுவிட்டேன்
நான் கேட்டதை எங்கே போட்டுவிட்டாய்
என்ன தேடுகின்றாய் எங்கே ஓடுகின்றாய்
உந்தன் தேவைகளை ஏன் மூடுகின்றாய்
உந்தன் தேவைகளை ஏன் மூடுகின்றாய் (அழகே)
இன்ப ஆற்றினில்
ஓடம் ஓடிவரும்
அந்த ஓடத்தில்
உலகம் கூடி வரும்
நம் முன்னவர்கள்
வெறும் முனிவரில்லை
அவர்
தனித்திருந்தால் நாம் பிறப்பதில்லை (அழகே)
ஒரு மொழி அறியாத
பறவைகளும்
இன்ப வழியறியும்
இந்த உறவறியும்
இரு
விழியிருந்தும் நல்ல மொழியிருந்தும்
இங்கு
வழியிருந்தும் ஏன் மயங்குகிறாய் (அழகே)
No comments:
Post a Comment