160.அழகென்னும் ஓவியம்
வருடம்
|
1976
|
பாடலாசிரியர்
|
முத்துலிங்கம்
|
படம்
|
ஊருக்கு
உழைப்பவன்
|
இசை
|
எம்.எஸ்.விஸ்வநாதன்
|
பாடியவர்
|
கே.ஜே.ஜேசுதாஸ்
|
பாடல் வரிகள்
அழகெனும் ஓவியம் இங்கே ..
உன்னை எழுதிய ரவி வர்மன் எங்கே ..
இலக்கிய காவியம் இங்கே
உன்னை இயற்றிய பாவலன் எங்கே ..(அழகெனும் ஓவியம் )
உன்னை எழுதிய ரவி வர்மன் எங்கே ..
இலக்கிய காவியம் இங்கே
உன்னை இயற்றிய பாவலன் எங்கே ..(அழகெனும் ஓவியம் )
காமன் கலைக்கோர் கல்லூரி கண்டேன் இரு விழியில் -
கவி கம்பன் எழுதாத பாட்டெல்லாம்
கேட்டேன் கிளி மொழியில்
முத்து சரங்கள் சிந்தாமல் சிறு நகையில் -
நான் மூன்றாம் தமிழை பார்க்கிறேன்
முத்து சரங்கள் சிந்தாமல் சிறு நகையில் -
நான் மூன்றாம் தமிழை பார்க்கிறேன்
கண்ணே உந்தன் இடையசைவில் (அழகெனும் ஓவியம் )
என்றும் இளமை மாறாமல் வாழும் சரித்திரமே -
நீ எந்தன் தலைவன் என்றெண்ணும்
என்றும் இளமை மாறாமல் வாழும் சரித்திரமே -
நீ எந்தன் தலைவன் என்றெண்ணும்
எண்ணம் இனித்திடுமே
ஒன்றா இரண்டா என்னாசை
ஒன்றா இரண்டா என்னாசை
சொல்லில் வருவதில்லை -
நான் உன்னால் அடையும் பேரின்பம்
நான் உன்னால் அடையும் பேரின்பம்
அந்த சொர்க்கம் தருவதில்லை (இலக்கிய காவியம் )
ஆடை விலக்கும் பூங்காற்றை நீ ஏன் அழைத்து வந்தாய்
நான் ஆட துடிக்கும் தேனாற்றை நீ ஏன் மறைத்து வந்தாய்
நீரில் குளிக்கும் நேரத்தில் நீ ஏன் கொதித்திருந்தாய்
நான் நீந்தும் சுகத்தை தாளாமல் இங்கு நீ ஏன் துடித்திருந்தாய் (அழகெனும் ஓவியம்)
ஆடை விலக்கும் பூங்காற்றை நீ ஏன் அழைத்து வந்தாய்
நான் ஆட துடிக்கும் தேனாற்றை நீ ஏன் மறைத்து வந்தாய்
நீரில் குளிக்கும் நேரத்தில் நீ ஏன் கொதித்திருந்தாய்
நான் நீந்தும் சுகத்தை தாளாமல் இங்கு நீ ஏன் துடித்திருந்தாய் (அழகெனும் ஓவியம்)
No comments:
Post a Comment