!- START disable copy paste -->

Sunday, May 24, 2015



157.அழகுக்கும் மலருக்கும்


வருடம்   
1963                                      
பாடலாசிரியர்
கண்ணதாசன்           
படம்    
நெஞ்சம் மறப்பதில்லை                 
இசை
விஸ்வநாதன் ராமமுர்த்தி
பாடியவர்
பி.பி.ஸ்ரீநிவாஸ் எஸ்.ஜானகி 

..        

                        பாடல் வரிகள்

அழகுக்கும் மலருக்கும் ஜாதியில்லை - நெஞ்சில்
ஆசைக்கும் உறவுக்கும் பேதமில்லை
இரவுக்கும் பகலிடம் கோபமில்லை - இந்த
ஏழையின் காதலில் பாபமில்லை  (அழகுக்கும்)

ஒரு மாலையில் பலவித மலருண்டு - ஒரு
மனதினில் ஆயிரம் நினைவுண்டு - அந்த
ஆயிரம் நினைவுக்கும் அழகுண்டு - அது
காதலென்றால் அதில் கனிவுண்டு - இந்த
நெஞ்சினிலும் ஓர் நிழலுண்டு - அதில்
நீலப் பூவிழி மயிலுண்டு

எந்தன்  தோட்டத்திலும் ஒரு துணையுண்டு
எந்தன் தோள்களிலும் ஒரு கிளியுண்டு   (அழகுக்கும்)

உந்தன் கண்ணிலும் முகத்திலும் ஓடிவரும் - இளம்
காற்றின் விலையே கோடி பெறும் உந்தன்
எண்ணத்தில் விழுந்தே ஆடி வரும் - அந்த
இன்பத்தின் விலையே கோடி பெறும்
நாம் ஒன்றுபடும் நாள் வந்துவிடும் உந்தன்
ஓரப் பார்வை வென்றுவிடும்

அந்தப் பாதையெல்லாம் மலர் தூவி வரும்
இந்தப் பாவையுடன் எந்தன் ஆவி வரும்  (அழகுக்கும்)

No comments:

Post a Comment