!- START disable copy paste -->

Sunday, May 24, 2015


139.அழகான பொண்ணுதான்


வருடம் 
1956                                      
பாடலாசிரியர்
மருதகாசி
படம்   
அலிபாபாவும் 40 திருடர்களும்        
இசை
தட்சிணாமூர்த்தி
பாடியவர்
பானுமதி                          

           
                        பாடல் வரிகள் 

அழகான பொண்ணு நான் அதுகேற்ற கண்ணு தான்
என்கிட்ட இருப்பதெல்லம் தன்மானம் ஒண்ணு தான்
அழகான பொண்ணு நான் அதுகேற்ற கண்ணு தான்
என்கிட்ட இருப்பதெல்லம் தன்மானம் ஒண்ணு தான்  (அழகான)

ஈடில்லா காட்டு ரோஜா இதை நீங்க பாருங்க
எவரேனும் பறிக்க வந்தா குணமே தான் மாறுங்க
முள்ளே தான் குத்தும்ங்க
ஓ..ஓ..ஓ..ஓ..ஓ..
அங்கொண்ணு இளிக்குது ஆந்தை போல் முழிக்குது
ஆட்டத்தை ரசிக்கவில்லை ஆளைதான் ரசிக்குது   (அழகான)

இங்கொண்ணு என்னை பாத்து கண்ஜாடை பண்ணுது
ஏமாளி பொண்ணு என்னு ஏதேதோ எண்ணுது..
ஏதேதோ எண்ணுது..
ஓஓ..ஓ..ஓ..ஓ….
பெண்ஜாதிய தவிக்கவிட்டு பேயாட்டம் ஆடுது
பித்தாகி என்னை சுத்தி கைத்தாளம் போடுது      (அழகான)

No comments:

Post a Comment