!- START disable copy paste -->

Sunday, May 24, 2015



138.அழகான பூக்கள்


வருடம்  
1984                          
பாடலாசிரியர்
வைரமுத்து         
படம்    
அன்பே ஓடிவா              
இசை
இளையராஜா                                 
பாடியவர்
எஸ்.பி.பி.  

                            
                            பாடல் வரிகள்

தனனான தானா தனனானனா
தனனான னானா னானானனா
ஓ ஹோ ஹோ

அழகான பூக்கள் மலர்ந்தாடுமே
நீ வந்து நின்றால் வாய் மூடுமே
பொன்மானே செந்தேனே வந்தேனே
உன் கண்ணில் கண்டேனே என்னை நானே  (அழகான)

காலங்களே சொல்லுங்களே காதல் ஒரு வேதம்
வேதங்களின் சாரங்களை நான் பாடுவேன் நாளும்
ஓடைக்கரை பூக்கள் எல்லாம் உன் பேரையே பாடும்
நீ சூடும் பூவெல்லாம் மோட்சம் போகுமா
ஜீவன் தொடும் தேவன் மகள் யார் அது நீயா (அழகான)

லாலா லலா லலா லலா
லாலா லலா லலா லலால
லால லா லா லா லா ஹா

மேகங்களில் ஊஞ்சல் கட்டி ஆடிவிடு தோழி
ஆகாயத்தில் பூப்பூக்கட்டும் ஆணையிடு தேவி
மௌனங்களே உன் பாஷையா தாங்காதடி ஆவி
நான் பாடும் கானங்கள் காதில் கேட்குமா
காதல் தரும் காமன் மகள் யார் அது நீயா  (அழகான)

No comments:

Post a Comment