130.அவளே என் காதலி
வருடம்
|
1976
|
பாடலாசிரியர்
|
வாலி
|
படம்
|
பேரும்
புகழும்
|
இசை
|
எம்.எஸ்.விஸ்வநாதன்
|
பாடியவர்
|
எஸ்.பி.பி.
&வாணிஜயராம்
|
பாடல் வரிகள்
அவளே என் காதலி
கொடி நீருக்குள்ளே மலர் மேலே
பெண் குளிப்பது தாமரை போலே
நான் நீராய் பிறந்திருந்தாலும்
இந்நேரம் என்னென்னவோ
கொடி நீருக்குள்ளே மலர் மேலே
பெண் குளிப்பது தாமரை போலே
நான் நீராய் பிறந்திருந்தாலும்
இந்நேரம் என்னென்னவோ
அவனே என் காதலன்
நடை மேடையிலே விழி இங்கே
அவன் நாடகம் பார்ப்பது எங்கே
அவன் நீராய் பிறந்திருந்தாலும்
இந்நேரம் என்னென்னவோ
நடை மேடையிலே விழி இங்கே
அவன் நாடகம் பார்ப்பது எங்கே
அவன் நீராய் பிறந்திருந்தாலும்
இந்நேரம் என்னென்னவோ
தாலாட்டும் பிள்ளை
ஒன்று
சேலாட்டம் பெண்ணைக்கண்டு
வாலாட்டும் எண்ணம் என்ன
இலையோ…மலரோ…கனியோ
சேலாட்டம் பெண்ணைக்கண்டு
வாலாட்டும் எண்ணம் என்ன
இலையோ…மலரோ…கனியோ
பால் வாசம்
சிந்தும் சின்ன
பாப்பாவின் உள்ளம் இன்று
பூவாசம் கொண்டதென்ன
அதுவோ…இதுவோ…எதுவோ (அவளே)
பாப்பாவின் உள்ளம் இன்று
பூவாசம் கொண்டதென்ன
அதுவோ…இதுவோ…எதுவோ (அவளே)
தொட்டாலும்
ஒட்டிக்கொள்ளும்
பட்டான வெள்ளிக்கன்னம்
எட்டாமல் செய்வதென்ன
இனமோ…குலமோ…பயமோ
பட்டான வெள்ளிக்கன்னம்
எட்டாமல் செய்வதென்ன
இனமோ…குலமோ…பயமோ
பேராசை வெள்ளம்
வந்து
போராடும் போதும் பெண்கள்
தாய்வீடு தந்த செல்வம்
அச்சம்…நாணம்…வெட்கம் (அவனே)
போராடும் போதும் பெண்கள்
தாய்வீடு தந்த செல்வம்
அச்சம்…நாணம்…வெட்கம் (அவனே)
No comments:
Post a Comment