!- START disable copy paste -->

Tuesday, May 19, 2015



110.அய்யராத்து பொண்ணு சொன்னா



வருடம்  
1975                               
பாடலாசிரியர்
வாலி        
படம்    
உங்க வீட்டு கல்யாணம்          
இசை
விஜயபாஸ்கர்                                 
பாடியவர்
கோவை சௌந்தர்ராஜன் & எல்.ஆர்.அஞ்சலி   

                            
                            பாடல் வரிகள்

அய்யராத்து பொண்ணு சொன்னா கேட்டுக்கோடா அம்பி
ஆத்துக்காரியா என்னை ஏத்துக்கோடா நம்பி உன்
ஆத்துக்காரியா என்னை ஏத்துக்கோடா நம்பி
அய்யராத்து பொண்ணு சொன்னா கேட்டுக்கோடா அம்பி

மாற்றான் தோட்டத்து மல்லிகையே வா.......
புரட்சியை விரும்பும் கன்னிகையே வா.....
எதையும் தாங்கும் இதயமே நீ வா........
நான் தள்ளாடி போனாலும் தாத்தாவா ஆனாலும்
நீதாண்டி பொண்டாட்டி கண்ணே அசடு.........(அய்யராத்து)

மைலாப்பூர் வக்கீலாத்து மாமி என்னைப்  பாத்தா
மாட்டுப்பொண்ணா வாக்கப்பட ஜாதகத்த கேட்டா
மாமி வந்து கேட்டதோ மூணு மாசம் லேட்டா உன்ன
மனசுல நெனச்சுண்டு சொல்லிட்டேண்டா டாட்டா

ஓடி வந்த தெய்வமே உன்னை விட மாட்டேன்
உன்னை விட்டு வேறு எந்த பெண்ணைத் தொட மாட்டேன்
மேடையிலே  நின்னபோதே ஜாடையிலே  பார்த்தேன்
ஜாடையிலே  உன்னிடத்தில் சம்மதத்தை கேட்டேன்
சமத்துடா நீ...... அய்யராத்து பொண்ணு சொன்னா கேட்டுக்கோடா அம்பி

எதுதாத்து ஹேமாம்புஜம் ஏழெட்டு மாசம்
பக்கத்தாத்து பத்மாவுக்கு சீமந்தம் போன மாசம்
கோடி ஆத்து கோமளாவின் கல்யாணம் அடுத்த மாசம்
நேக்கும்தான் வயசாச்சுடா எப்ப நம்ப ஜானவாசம்
சொல்லுடா கண்ணா அய்யராத்து பொண்ணு சொன்னா கேட்டுக்கோடா அம்பி
  

No comments:

Post a Comment