108.அமைதியான நதியினிலே
வருடம்
|
1964
|
பாடலாசிரியர்
|
கண்ணதாசன்
|
படம்
|
ஆண்டவன்
கட்டளை
|
இசை
|
விஸ்வநாதன் ராமமுர்த்தி
|
பாடியவர்
|
பி.சுசீலா & டி.எம்.எஸ்.
|
பாடல்
வரிகள்
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும் ஹோய் ஹோய் – (அமைதியான)
தென்னை இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது
தென்னைதனை சாய்த்து விடும் புயலாக வரும்பொழுது
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது
காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்த மனம் வீழ்வதில்லை
அமைதியான நதியினிலே ஓடும்
நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது
நாணம் எனும் தென்றலிலே தொட்டில் கட்டும் மென்மையிது
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
அந்தியில் மயங்கி விழும் காலையில் தெளிந்து விடும்
அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்பநிலை மாறிவிடும்
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும் ஹோய்...ஹோய்.... (அமைதியான)
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும் ஹோய் ஹோய் – (அமைதியான)
தென்னை இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது
தென்னைதனை சாய்த்து விடும் புயலாக வரும்பொழுது
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது
காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்த மனம் வீழ்வதில்லை
அமைதியான நதியினிலே ஓடும்
நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது
நாணம் எனும் தென்றலிலே தொட்டில் கட்டும் மென்மையிது
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
அந்தியில் மயங்கி விழும் காலையில் தெளிந்து விடும்
அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்பநிலை மாறிவிடும்
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும் ஹோய்...ஹோய்.... (அமைதியான)
No comments:
Post a Comment