!- START disable copy paste -->

Tuesday, May 19, 2015


106.அமுதே தமிழே அழகிய


வருடம்  
1981                              
பாடலாசிரியர்
புலமைப்பித்தன்      
படம்    
கோயில் புறா                    
இசை
இளையராஜா                                 
பாடியவர்
பி.சுசீலா & எஸ்.பி.ஷைலஜா

                            
                            பாடல் வரிகள்

சரிக சரிக சரிசரி கபகரி சரிக
சரிக சரிக சரிசரி கபகரி சரிக

அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
சுகம் பல தரும் தமிழ்ப்பார்
சுவையோடு கவிதைகள் தா
தமிழே நாளும் நீ பாடு   (அமுதே)

தேனூறும் தேவாரம் இசைப் பாட்டின் ஆதாரம்
தமிழிசையே தனியிசையே
தரணியிலே முதலிசையே
ஊன் மெழுகாய் உருகும் கரையும் அதில்
உலகம் மறந்து போகும்
பூங்குயிலே என்னோடு தமிழே நாளும் நீ பாடு (அமுதே)

பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்
கலை பலவும் பயிலவரும் அறிவு வளம் பெருமை தரும்
என் கனவும் நினைவும் இசையே
இசையிருந்தால் மரணமேது
என் மனதில் தேன் பாய தமிழே நாளும் நீ பாடு  (அமுதே)

6 comments:

  1. P.சுசிலா & உமா ரமணன் பாடியது. 

    ReplyDelete
  2. உண்மையான அமுது. தமிழ் அது. இளையராஜாவின் இன்னிசையில் மற்றுமொன்று. 👌👌

    ReplyDelete