103.அமராவதியே என்
வருடம்
|
1957
|
பாடலாசிரியர்
|
கண்ணதாசன்
|
படம்
|
அம்பிகாபதி
|
இசை
|
ஜி.ராமநாதன்
|
பாடியவர்
|
டி.எம்.எஸ்
|
.
பாடல் வரிகள்
அமராவதியே என்
ஆசைக் கனியமுதே
கமழும் தமிழ் மணமே
கட்டழகே.....நித்திலமே.....
இமையாது எனை
நோக்கி என்
உயிரைக் கொள்ளை
கொண்டு
அமையாது நின்போல் அகன்றாயே
ஆற்றுவேனோ
...............ஆற்றுவேனோ.......
அங்கமேவும்
அரவிந்த மாமலரில் வந்த வேதவல்லியா
கடல் தந்த
பொன்னின் செல்வியா (2)
மனம் சிந்தை வாடும்
இல்லையா
என்று கண்ட போதில்
ஐயம் கொண்டு பேசும்
எழில்
நின்றுலாவும் கிள்ளையாள்
சொந்தம் மேவும்
இளநங்கையாளின் எழில்
அங்கம் யாவும்
தங்கமே
முகம் பொங்கும்
சந்திர பிம்பமே (2)
சற்றும் அங்கில்லை
களங்கமே
பிறை குன்று போல
நெற்றி சங்குப் போல் கழுத்தும்
சொல்லொண்ணாத
இன்பமே
கொண்டல் நாணும்
குழல் தெண்டை நாணும் குரல்
வண்டு நாணும்
விழியாள் கற்கண்டு நாணும் மொழியாள்
பல்லைத்தண்டு நாணும்
செவியாள்
மின்னல் கண்டு
நாணும் இடை கொண்டு
தேனும் சுவை
குன்றி நாணும் இதழாள் (அங்கமேவும்)
No comments:
Post a Comment