!- START disable copy paste -->

Sunday, May 17, 2015



102.அம்மானை அழகுமிகும்


வருடம்   
1976                                              
பாடலாசிரியர்
கண்ணதாசன் 
படம்    
அவன் ஒரு சரித்திரம்            
இசை
எம்.எஸ்.விஸ்வநாதன்                                                          
பாடியவர்
டி.எம்.எஸ். & வாணிஜெயராம் 

                             
                            பாடல் வரிகள்

அம்மானை அழகுமிகும் கண்மானை
ஆடிவரும் பெண்மானை தேடிவரும் பெருமானை
தேடிவரும் பெருமானை  (அம்மானை)

நம்பிய பெண் ஒரு தாரகை –அவள்
நாடிய நீயொரு வானகம் (2)
விண்ணகம் மாறிய போதிலும் –இந்த
பெண்ணகம் மாறுவதில்லையே (2)  (அம்மானை)

பாலினுள் மறைந்துள்ள சுவையென
விழி பளிங்கினில் மறைந்தது உன் முகம்
ஆழியில் மறைந்துள்ள மணியென உன்
ஆசையில் மறைந்துளதென் மனம்

கன்னியின் நால்வகை சாத்திரம் –தன்
காதலன் கண்களில் மாத்திரம் (2)
உன்னிடம் தான்  ஒரு பாத்திரம் –அதில்
ஊற்றிய தேன் மழை உன் முகம் (அம்மானை)

பொன்னிற வண்டுகள் பாடின –அவை
பூவெனும் மெத்தையில் கூடின (2)
என் இரு கண்களும் தேடின –அவை
ஏக்கத்தில் உன்னிடம் ஓடின

மங்கலச் சங்குகள் அழைத்தன –இரு
மந்திர முல்லைகள் இழுத்தன (2)
உன்னுடன் உடல் உயிர் கலந்தன –இங்கு
ஒன்றுமில்லை இனி எனக்கென  (அம்மானை)



No comments:

Post a Comment