101.அம்மான் மகன் எங்கே
வருடம்
|
1975
|
பாடலாசிரியர்
|
கண்ணதாசன்
|
படம்
|
வைரநெஞ்சம்
|
இசை
|
எம்.எஸ்.விஸ்வநாதன்
|
பாடியவர்
|
எல்.ஆர்.ஈஸ்வரி
|
பாடல் வரிகள்
அம்மான் மகன்
எங்கே அவன் என்னோடு சேர்ந்தாட
அம்மான் மகன்
எங்கே அவன் என்னோடு சேர்ந்தாட
பெண் மானின்
பொன்மேனி விளையாட ஆஹாஹா
கன்னங்கள் சுகமாக
கவி பாட
செவ்வாய் இதழ்
சில்லென்றொரு பொல்லாத உறவாட
மெல்ல வா
.....அள்ள வா ........கொண்டு வா வா ராஜா (அம்மான்)
ஆடிடும் பூவோ
முன்னும் பின்னும் முன்னூறு
தேடுது உன்னை
கன்னி என்னும் தேனாறு
காதலின் வேகம்
கண்ணை விட்டு போகாது
மாறிய உள்ளம்
என்னை விட்டு மாறாது
மஞ்சமே தித்திக்க
மன்னவா வா என் அங்கம் துள்ள
மெல்ல வா
.....அள்ள வா ........கொண்டு வா வா ராஜா (அம்மான்)
மேனியின் மேலே
மச்சம் ஒன்று உண்டாக
மெல்லிடை மீது
மின்னல் உன்னை கண்டாட
ஆசையினாலே அல்லி
வண்ணம் பந்தாட
ஆயிரம் உண்டு
அந்திப்பட்டு கொண்டாட
அத்தனை இன்பமும்
இங்குதான் வா நாம் சொர்க்கம் செல்ல
மெல்ல வா
.....அள்ள வா ........கொண்டு வா வா ராஜா (அம்மான்)
No comments:
Post a Comment