!- START disable copy paste -->

Friday, May 15, 2015



34.அடி கார்த்திகை மாசமடி


வருடம்   
1975                             
பாடலாசிரியர்
கண்ணதாசன்                 
படம்    
வைரநெஞ்சம்                 
இசை
எம்.எஸ்.விஸ்வநாதன்   
பாடியவர்
டி.எம்.எஸ். & எல்.ஆர்.ஈஸ்வரி

.  

                        பாடல் வரிகள்

அடி கார்த்திகை மாசமடி கல்யாண சீசனடி
சாத்திரம் பாத்துக்கடி கண்ணாலே இங்கே
மாலைய மாத்திகடி முன்னால  (2)

சாத்திரம் பார்ப்பதென்ன ஜாதகத்தை கேட்பதென்ன
பாத்திரம் காத்திருக்கு ராஜாவே நீ
மாத்திரம் பாத்துக் கொள்ளு ரோஜாவ  (அடி கார்த்திகை)

தஞ்சாவூரு தங்கவேலு தாளம் வச்சு மேளம் வச்சு
தங்கம் உன்னை அள்ளிக் கொள்ள வேணும்
கம்பனூறு சந்தைக்கு போயி கருகமணி வளையலோட
காலுக்கு தண்டை வாங்கி வரவேணும்

அம்மாவுக்கு பாக்கு வைக்க மறக்காத
நீ சும்மா சும்மா சங்கதியெல்லாம் தொறக்காதே
அது வேணும் இது வேணும் எதையேனும் பெற வேணும் (அடி)

அத்த பொண்ணு வெக்கம் விட்டு ஆட வந்தா பாட வந்தா
ஆச வச்சு மெத்த போடு சாமி
பட்டு மெத்த கட்டிலிட்டு தொட்டு தொட்டு முத்தமிட்டு
பாடச் சொல்லி ஆட வைப்பேன் வா நீ

அப்போ இனி என் கையிலே அதிகாரம்
அட இப்ப சொல்லு அம்மாவுக்கு நமஸ்காரம்
மகராசி மகராணி பலகோடி நமஸ்காரம் (அடி)


No comments:

Post a Comment