!- START disable copy paste -->

Sunday, May 24, 2015



151.அழகு சிரிக்கின்றது



வருடம்     
1963                                  
பாடலாசிரியர்
கண்ணதாசன்
படம்   
இருவர் உள்ளம்                  
இசை
கே.வி.மகாதேவன்    
பாடியவர்
டி.எம்.எஸ். & பி.சுசீலா  

.  

                        பாடல் வரிகள்

அழகு சிரிக்கின்றது………. ஆசை துடிக்கின்றது
பழக நினைக்கின்றது…….. பக்கம் வருகின்றது
பக்கம் வருகின்றது………. வெட்கம் தடுக்கின்றது
காதல் கனிகின்றது………. கையில் விழுகின்றது (அழகு)

வண்டு வருகின்றது மலரில் அமர்கின்றது
உண்டு சுவைகின்றது உறங்கி விழுகின்றது
வானம் பொழிகின்றது பூமி நனைகின்றது
மேனி குளிர்கின்றது வெள்ளம் வழிகின்றது  (அழகு)

இரவு விடிகின்றது இளமை எழுகின்றது
குளித்து வருகின்றது கூந்தல் முடிகின்றது
அருகில் அமர்கின்றது அத்தான் என்கின்றது
ஆர்வம் பிறக்கின்றது அன்பு அழைக்கின்றது  (அழகு)

No comments:

Post a Comment