!- START disable copy paste -->

Friday, May 15, 2015




15.அங்கே வருவது யாரோ



வருடம்       
1974         
பாடலாசிரியர்
அவிநாசிமணி      
படம்   
நேற்று இன்றுநாளை               
இசை
எம்.எஸ்.விஸ்வநாதன்             
பாடியவர்
எஸ்.பி.பி.& எஸ்.ஜானகி


                                                                      
                              பாடல் வரிகள்

 அங்கே வருவது யாரோ
அது வசந்தத்தின் தேரோ வசந்தத்தின் தேரோ
கோடி கனவுகள் ஆடி வருகுது
கோவில் சிலை ஒன்று ஓடி வருகுது
பாடும் கவிதையின் ஏடு வருகுது
பாதியை பாதி தேடி வருகுது

வருவது யாரோ அது வசந்தத்தின் தேரோ
அங்கே வருவது யாரோ
அது வள்ளலின் தேரோ வள்ளலின் தேரோ

பேசி பார்ப்பதால் அந்த ஆசை தீருமோ
இதழ் ஓசை கேட்பதால் வேறு பாஷை வேண்டுமோ
ஆஆஆ நேரம் இந்த நேரம்
போனால் நெஞ்சம் ஆறுமோ
பாடும் கவிதையின் ஏடு வருகுது
பாதியை பாதி தேடி வருகுது
வருவது யாரோ அது வள்ளலின் தேரோ

அங்கே வருவது யாரோ அது வசந்தத்தின் தேரோ 

கட்டில் தேடுது இதழ் காயம் ஆனது
நீ தொட்டால் ஆறுது என் தூக்கம் போனது
தேவை இன்னும் சேவை என்று தேடி பார்க்குமோ
பாடும் கவிதையின் ஏடு வருகுது
பாதியை பாதி தேடி வருகுது
வருவது யாரோ அது வசந்தத்தின் தேரோ 

அங்கே வருவது யாரோ அது வசந்தத்தின் தேரோ
அங்கே வருவது யாரோ அது வள்ளலின் தேரோ வள்ளலின் தேரோ

No comments:

Post a Comment