145.அழகிய கண்ணே உறவுகள்
வருடம்
|
1979
|
பாடலாசிரியர்
|
கண்ணதாசன்
|
படம்
|
உதிரிப்பூக்கள்
|
இசை
|
இளையராஜா
|
பாடியவர்
|
எஸ்.ஜானகி
|
பாடல் வரிகள்
அழகிய கண்ணே
உறவுகள் நீயே
நீ எங்கே இனி நான்
அங்கே
என் சேய் அல்ல தாய் நீ
அழகிய கண்ணே உறவுகள் நீயே (அழகிய)
என் சேய் அல்ல தாய் நீ
அழகிய கண்ணே உறவுகள் நீயே (அழகிய)
சங்கம் காணாதது
தமிழும் அல்ல
தன்னை அறியாதவள் தாயுமல்ல
என் வீட்டில் என்றும் சந்திரோதயம்
நான் கண்டேன் வெள்ளி நிலா (அழகிய)
தன்னை அறியாதவள் தாயுமல்ல
என் வீட்டில் என்றும் சந்திரோதயம்
நான் கண்டேன் வெள்ளி நிலா (அழகிய)
.
சொர்க்கம்
எப்போதும் நம் கையிலே
அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே
என் நெஞ்சம் என்றும் கண்ணாடி தான்
என் தெய்வம் மாங்கல்யம் தான் (அழகிய)
அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே
என் நெஞ்சம் என்றும் கண்ணாடி தான்
என் தெய்வம் மாங்கல்யம் தான் (அழகிய)
மஞ்சள்
என்றென்றும் நிலையானது
மழை வந்தாலுமே கலையாதது
நம் வீட்டில் என்றும் அலைமோதுது
என் நெஞ்சம் அலையாதது (அழகிய)
மழை வந்தாலுமே கலையாதது
நம் வீட்டில் என்றும் அலைமோதுது
என் நெஞ்சம் அலையாதது (அழகிய)
No comments:
Post a Comment