!- START disable copy paste -->

Tuesday, May 19, 2015



105.அமுதும் தேனும்


வருடம்   
1958                                                        
பாடலாசிரியர்
சுரதா 
படம்    
தை பிறந்தால் வழி பிறக்கும்   
இசை
கே.வி.மகாதேவன்           
பாடியவர்
சீர்காழி கோவிந்தராஜன்   


                                              பாடல் வரிகள்

அமுதும் தேனும் எதற்கு நீ
அருகினில் இருக்கையிலே எனக்கு
அமுதும் தேனும் எதற்கு
அருவி தரும் குளிர் நீர் அன்பே இனிமேல்
அதுவும் சுடுநீராகும் நமக்கு    (அமுதும்)

நிலவின் நிழலோ உன் வதனம் - புது
நிலைக் கண்ணாடியோ மின்னும் கன்னம்
மலையில் பிறவா மாமணியே - நான்
கொய்யும் கொய்யாக் கனியே வான்   (அமுதும்)

விழியாலே காதல் கதை பேசு மலர்க்
கையாலே சந்தனம் பூசு - தமிழ்
மொழி போல சுவையூட்டும் செந்தேனே
உடல் நான் உயிர் நீ தானே    (அமுதும்)

2 comments:

  1. பிறவா வரம் தானே நீ எனக்கு....சரணத்தில் விட்டு போன வரி

    ReplyDelete
  2. வான்3வதுவரிஆரம்பம்

    ReplyDelete