!- START disable copy paste -->

Sunday, May 24, 2015



165.அழுதக் கண்ணீர் பாலாகுமா


வருடம்
1960                              
பாடலாசிரியர்
ப.கோ.கல்யாணசுந்தரம்  
படம்   
பாதை தெரியுது பார்               
இசை
எம்.பி.ஸ்ரீநிவாஸ்    
பாடியவர்
பி.சுசீலா

,                               
                         பாடல் வரிகள் 

அழுதக் கண்ணீரும் பாலாகுமா
அதனால் உனது பசி தீருமா
இன்பச் சுமையில் இருந்தவனே
துன்பச் சுமையாய் பிறந்தவனே  (அழுதக்)

தாய் ஒரு ஏழை அறியாமல்
துயர் தந்திட வந்தாய் என் மகனே
நீ ஒரு செல்வம் என்றிடுவார் என்
நெஞ்சக் குமுறலைச் சொல்லிடுவாய் (அழுதக்)

சின்னஞ்சிறிய குடிசையில் ஒளிச்
சிந்திட வந்த திரு விளக்கே
எண்ணை இல்லாமல் பொன் விளக்கில் சுடர்
ஆடித் துடிக்குதே ஆண்டவனே (அழுத)

நட்ட நடுத்தெரு ஓரத்திலே
பனி கொட்டிடும் குளிரில் நடுங்குகிறாய்
கட்டிய மார்பினில் முகம் புதைத்து நீ
உறங்கிடடா என் கண்மணியே   (அழுத)


164.அழகே வா அருகே வா


வருடம்     
1964                                 
பாடலாசிரியர்
கண்ணதாசன்
படம்   
ஆண்டவன் கட்டளை             
இசை
விஸ்வநாதன் ராமமுர்த்தி   
பாடியவர்
பி.சுசீலா  & டி.எம்.எஸ்.            


                       பாடல் வரிகள்

அழகே வா……
அழகே வா அருகே வா
அலையே வா தலைவா வா
அழகே வா வா வா அழகே வா
ஆலய கலசம் ஆதவனாலே
மின்னுதல் போலே மின்னுது இங்கே (அழகே)

ஒரு கேள்வியை உன்னிடம் கேட்டுவிட்டேன்
நான் கேட்டதை எங்கே போட்டுவிட்டாய்
என்ன தேடுகின்றாய் எங்கே ஓடுகின்றாய்
உந்தன் தேவைகளை ஏன் மூடுகின்றாய்
உந்தன் தேவைகளை ஏன் மூடுகின்றாய் (அழகே)

இன்ப ஆற்றினில் ஓடம் ஓடிவரும்
அந்த ஓடத்தில் உலகம் கூடி வரும்
நம் முன்னவர்கள் வெறும் முனிவரில்லை
அவர் தனித்திருந்தால் நாம் பிறப்பதில்லை (அழகே)

ஒரு மொழி அறியாத பறவைகளும்
இன்ப வழியறியும் இந்த உறவறியும்
இரு விழியிருந்தும் நல்ல மொழியிருந்தும்
இங்கு வழியிருந்தும் ஏன் மயங்குகிறாய்  (அழகே)



163.அழகே நீ பிறந்தது


வருடம்  
1984                                
பாடலாசிரியர்
கங்கை அமரன்         
படம்    
நாணயம் இல்லாத நாணயம்        
இசை
விஜய் ஆனந்த்                    
பாடியவர்
எஸ்.பி.பி

.   
                            
                            பாடல் வரிகள்

அழகே நீ பிறந்தது இவளிடம் தானோ
அமுதே நீ தவழ்ந்திடும் இதழ் இதுதானோ (அழகே)

விண்வெளி தீபங்களோ மயிலின் விழிகள்
தேன்மழை சாரல்களோ குயிலின் மொழிகள்
மாஞ்சோலை கனிகள் உன் தேகச் சிமிழ்கள்
நீ காட்டும் எழில்கள் என் கண்ணின் தாபங்கள்

கலையோ கலைமகள் அருள் வரமோ
செவ்வானிலே பொன் மேகமே இந்த
பூமகள் வரும் ரதமோ (அழகே)

பகலின் ஒளி மழையில் இரவின் தவிப்பு
இரவின் குளிர் மடியில் பகலின் விழிப்பு
உன் பார்வை விருந்து என் நோயின் மருந்து
நீ சேரும் வரைக்கும் என் மஞ்சம் துடிக்கும்

கனியே கனிந்திட மனம் இல்லையோ
உன் நெஞ்சிலே என் ஓவியம் நான்
வரைந்திட தயவில்லையோ (அழகே)