92.அம்மா ஓர் அம்பிகை
வருடம்
|
1982
|
பாடலாசிரியர்
|
வாலி
|
படம்
|
தீர்ப்பு
|
இசை
|
எம்.எஸ்.விஸ்வநாதன்
|
பாடியவர்
|
பி.ஜெயச்சந்திரன்
சுரேந்திரன் பி.சசிரேகா & குழுவினர்
|
பாடல் வரிகள்
அம்மா ஓர் அம்பிகை
போல் அப்பா ஓர் ஆண்டவன் போல்
மீனாட்சி சோமனை
போல் வைதேகி ராமனைப் போல்
கண்கண்ட
தெய்வங்களே நீங்கள் பல்லாண்டு வாழுங்களேன் (அம்மா)
தாயின் மடிமீது
மூன்று தமிழ்போல் நாங்கள் உருவாகினோம்
வாசம் குறையாத
பாசமலர் போல் வாழ்ந்து உறவாடுவோம்
தர்மங்கள்
கொண்டாடும் தேவாலயம் தந்தை மனமல்லவோ
காலங்கள்
சென்றாலும் நம்மோடுதான் காவல் வருமல்லவோ
(அம்மா)
ஆனைமுகன் போல்
மூத்த பிள்ளை நீதி நிலை நாட்டுவான்
ஆறுமுகன் போல
வாழும் மகன்தான் நேர்மை பணியாற்றுவான்
நாங்கள் என்னோடு
நான் கொண்டது தாயின் அருளல்லவோ
மானத்தில்
எந்நாளும் மானாகத்தான் வாழும் குலமல்லவோ
(அம்மா)
காற்றில் அணையாத தீபமெனவே நீங்கள் ஒளி வீசுங்கள்
காலம் மறவாத
காமராஜர் தியாகம் தினம் பேசுங்கள்
நெஞ்சோடு நான்
கொஞ்சும் ரோஜாக்களே நேரு பேர் சொல்லுங்கள்
எல்லோரும்
கொண்டாடும் இந்திரா என நாட்டை உருவாக்குங்கள் (அம்மா)
No comments:
Post a Comment