!- START disable copy paste -->

Saturday, May 16, 2015



67.அதோ வாராண்டி


வருடம்  
1980                                  
பாடலாசிரியர்
கண்ணதாசன்
படம்   
பொல்லாதவன்                   
இசை
எம்.எஸ் விஸ்வநாதன் 
பாடியவர்
எஸ்.பி.பி. & வாணி ஜெயராம்     


                            பாடல்  வரிகள் 

அதோ வாரான்டி வாரான்டி வில்லேந்தி ஒருத்தன்
என் மீது எய்தானம்மா
அம்மம்மா ஏதேதோ சொன்னானம்மா
ஒண்ணோடு ஒண்ணாக...கண்ணோடு கண்ணாக (அதோ )

நான் உங்கள் பக்கத்தில் வந்தேனென்றால்
மாதங்கள் பனிரெண்டும் குளிரல்லவா
மேகங்கள் இல்லாத வானில்லையே
நீயின்றி எப்போதும் நானில்லையே
ஒண்ணோடு ஒண்ணாக...கண்ணோடு கண்ணாக  (அதோ)

வாழைப்பூ பெண்ணாக வடிவானதோ
வாடைக்கு சுகமாக வருகின்றதோ
எந்நாளும் உன் மேனி பொன்னல்லவா
எழுதாத கதை சொல்லும் கண்ணல்லவா
ஒண்ணோடு ஒண்ணாக...கண்ணோடு கண்ணாக (அதோ)

சிப்பிக்குள் முத்துக்கள் நான் பார்க்கவா
சிந்தாத முத்தங்கள் நான் கேட்கவா
எப்போது கேட்டாலும் தருவேனம்மா
எங்கே நீ இருந்தாலும் வருவேனம்மா
ஒண்ணோடு ஒண்ணாக...கண்ணோடு கண்ணாக- (அதோ)


No comments:

Post a Comment